நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் முதல் கட்டமாக வரும் 16ஆம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில், அது தொடர்பான மக்களின் சந்தேகங்களை களைய தாமும் தனது அமைச்சரவை சகாக்களுக்கும் தடுப்பூசி போட்டுக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பிரதமர் நரேந்திர மோதியை கேட்டுக் கொண்டுள்ளார்.
தற்போது இந்திய அரசு வகுத்துள்ள வழிகாட்டுதல்களின்படி வரும் 16ஆம் தேதி கொரோனா தடுப்பூசி போட, முன் கள மருத்துவ சுகாதார பணியாளர்கள் மட்டுமே தகுதி பெறுவார்கள். இது தொடர்பாக இந்த வார தொடக்கத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்களுடன் காணொளி காட்சி வாயிலாக பேசிய பிரதமர் நரேந்திர மோதி, மக்கள் பிரதிநிதிகள் அவர்களுக்கான வாய்ப்பு வரும்வரை காத்திருக்க வேண்டும் என்று கூறினார்.
ஆனால், "பொது மக்கள் மத்தியில் கொரோனா தடுப்பூசிகள் தொடர்பாக சந்தேகம் இருக்கிறது. ஆகவே, அரசியல் கட்சித் தலைவர்கள், முதலமைச்சர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் முதற்கட்டமாக தடுப்பூசி போட்டுக்கொண்டால் மட்டுமே பொது மக்களுக்கு நம்பிக்கை வரும். இந்த விஷயத்தில் தாமும் தமது அமைச்சரவை சகாக்களும் தடுப்பூசி போட்டுக் கொண்டு முன்னுதாரணமாக விளங்க விரும்புவதாகவும் அதற்கு அனுமதி தர வேண்டும் என்றும் முதல்வர் நாராயணசாமி கோரிக்கை வைத்துள்ளார்.
ஆனால், அவரது கோரிக்கை தொடர்பாக பிரதமரோ இந்திய சுகாதாரத்துறையோ எந்த கருத்தையும் இதுவரை வெளியிடவில்லை
No comments:
Post a Comment