Friday, January 29, 2021

வரி சலுகையை இரட்டிப்பு

 பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ள 2021-22ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் நடுத்தர மக்களுக்கு அதிகப் பலன் அளிக்கும் வகையில் 80சி பிரிவில் பெறும் வரி சலுகையை இரட்டிப்புச் செய்யப் பல அமைப்புகள் கோரிக்கை விடுத்த நிலையில் FICCI அமைப்பும் மத்திய நிதியமைச்சகத்திடமும், பட்ஜெட் குழுவிடமும் பரிந்துரை செய்துள்ளது.

80சி பிரிவு வரிச் சலுகை

தனிநபர் வருமான வரியில் 80சி பிரிவின் கீழ் 1.5 லட்சம் ரூபாய் வரையிலான வரிச் சலுகை கிடைக்கும் நிலையில், 2021-22ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் இதன் அளவீட்டை இரட்டிப்புச் செய்து 3,00,000 ரூபாய் வரையில் வரிச் சலுகை அளிக்க வேண்டும் என Federation of Indian Chambers of Commerce and Industry (FICCI) அமைப்புக் கோரிக்கை வைத்துள்ளது.

No comments:

Post a Comment